மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதி விபத்து.. கிராம நிர்வாக உதவியாளர் உயிரிழப்பு!

 

மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதி விபத்து..  கிராம நிர்வாக உதவியாளர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட அத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் தாஸ். இவர் சிறுவேடல் கிராம நிர்வாக உதவியாளர் ஆக பணிபுரிந்து வந்தார். மோகன் தாஸ் நேற்று பனி நிமித்தமாக தனது கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அவர் காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏனாத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே மணல் லோடு ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி வேகமாக வந்துள்ளது.

மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதி விபத்து..  கிராம நிர்வாக உதவியாளர் உயிரிழப்பு!

கண்ணிமைக்கும் நொடியில் அந்த லாரி மோகன் தாஸ் சென்ற பைக் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மோகன் தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த உடன் அந்த லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், மோகன் தாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த லாரி மணல் கடத்திக் கொண்டு வந்ததா என்றும் லாரி ஓட்டிச் சென்றவர் யார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.