சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்!

 

சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்!

திண்டுக்கல் மாவட்டம், கீரனூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி(35). காய்கறி வியாபாரியான இவர் தனது மனைவி தேவியுடன் வசித்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தண்டபாணியை காணவில்லை என கீரனூர் காவல்நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்திருக்கிறார். தேவிக்கும் தண்டபாணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது.

சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்!

தேவி அளித்த புகாரின் பேரில் தண்டபாணியை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருக்கும் புதிய மேம்பாலம் அருகே உள்ள கிணற்றில் சாக்குப் பையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்தவர் தண்டபாணி தான் என அடையாளம் காணப்பட்டது.

தண்டபாணி கொலை செய்யப்பட்டு, சாக்குப் பையில் கிணற்றில் வீசப்பட்டிருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தண்டபாணியை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.