இளைஞனை நண்பர்களே பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்!

 

இளைஞனை நண்பர்களே பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்!

மதுரை அருகே மது போதையில் ஒரு இளைஞரை அவரது நண்பர்களே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் கூலபாண்டி கிராமத்தில் வசித்து வந்தவர் மணிகண்டன். அவர் காய்கறி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று இரவு அரசு மதுபான கடை அருகே மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே சண்டை அதிகமாகி ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டனின் நண்பர்கள், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மணிகண்டன் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர்.

இளைஞனை நண்பர்களே பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்!

உடல் முழுவதும் தீப்பற்றியதால் மணிகண்டன் கதறியைக் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இளைஞனை நண்பர்களே பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்!

முதற்கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக மணிகண்டனை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிய வந்துள்ளது. இதில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுபோதையில் நண்பர்களே மணிகண்டனை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.