சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த நபர்; தாயின் அனுமதியுடன் நடந்த கொடூரம்!

 

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த நபர்; தாயின் அனுமதியுடன் நடந்த கொடூரம்!

சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னையில் பெருமாள் என்பவர் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு திடீரென சோதனை மேற்கொண்ட போலீசார் அவரது கடையில் இருந்து 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த பெருமாளின் செல்போனை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில், 5 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு பெருமாள் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோக்கள் இருந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த நபர்; தாயின் அனுமதியுடன் நடந்த கொடூரம்!

அப்போது, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பெருமாளுக்கும் தவறான தொடர்பு இருந்ததும் அந்த பெண்ணின் அனுமதியுடனே அவரது மகளுக்கு பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பெருமாளின் கடைக்கு மற்றும் வீட்டிற்கு வரும் சிறுமிகளையும் அவர் பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.