‘கொரோனா பரிசோதனை எனக்கூறி பாலியல் சீண்டல்’ வசமாக சிக்கிய போலி ஆசாமி!

 

‘கொரோனா பரிசோதனை எனக்கூறி பாலியல் சீண்டல்’ வசமாக சிக்கிய போலி ஆசாமி!

நித்திரவிளை அருகே கொரோனா பரிசோதனை எனக்கூறி வீடு வீடாக சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் வீடுகளில் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி, ஒரு நபர் எல்லா வீடுகளுக்கும் சென்றுள்ளார். பரிசோதனை என்ற பேரில் அந்த நபர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த நபர் பல சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்ட நிலையில், யாரும் புகார் அளிக்க முன்வராததால் தொடர்ந்து அந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

‘கொரோனா பரிசோதனை எனக்கூறி பாலியல் சீண்டல்’ வசமாக சிக்கிய போலி ஆசாமி!

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் பெற்றோர் குளச்சல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அந்த நபரை போலீசார் நோட்டமிட்டு வந்தனர். வழக்கம் போல அந்த நபர் ஒரு வீட்டுக்குள் புகுந்த போது, அவரை வளைத்து பிடித்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படித்துள்ளனர்.

‘கொரோனா பரிசோதனை எனக்கூறி பாலியல் சீண்டல்’ வசமாக சிக்கிய போலி ஆசாமி!

அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் பெர்லின்(41) என்பதும் கொரோனா பரிசோதனை எனக்கூறி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், சிறையில் அடைத்துள்ளனர்.