சிறுமி 5 மாதம் கர்ப்பம் : ஆசைவார்த்தை பேசி ஏமாற்றிய தொழிலாளி கைது!

 

சிறுமி 5 மாதம் கர்ப்பம் : ஆசைவார்த்தை பேசி ஏமாற்றிய தொழிலாளி கைது!

ஈரோடு அருகே சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். சிறுமி காணாமல் போனது குறித்து தாயார் பங்களாப்புதூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுமி போலீசாரால் மீட்கப்பட்டார்.

சிறுமி 5 மாதம் கர்ப்பம் : ஆசைவார்த்தை பேசி ஏமாற்றிய தொழிலாளி கைது!

சிறுமியை போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது, சிறுமியிடம் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் அவரை பரிசோதித்ததில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில், வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்ற நபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நெருக்கமாக இருந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

அதனிடிப்படையில், சண்முகம் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சிறுமி அதே மில்லில் வேலை செய்து வந்த போது இவர்களுக்கிடையில் பழக்கம் ஏற்பட்டதும் திருமண ஆசைகாட்டி சண்முகம் சிறுமியை கடத்திச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சண்முகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.