ஏ.டி.எம்மை உடைத்து கொள்ளை முயற்சி; இளைஞர் கைது.. மற்றொருவருக்கு வலைவீச்சு!

 

ஏ.டி.எம்மை உடைத்து கொள்ளை முயற்சி; இளைஞர் கைது.. மற்றொருவருக்கு வலைவீச்சு!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள வெள்ள கேட் பகுதியில் இருக்கும் ஏ.டி.எம்மை மர்ம நபர்கள் உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. அப்போது அப்பகுதியிலிருந்து சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்து பார்த்ததில் 2 இளைஞர்கள் ஏ.டி.எம்மை உடைத்து கொள்ளை முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம்மை உடைத்து கொள்ளை முயற்சி; இளைஞர் கைது.. மற்றொருவருக்கு வலைவீச்சு!

இதனையடுத்து அந்த 2 இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணையைத் தொடர்ந்ததில், நெல்லி குப்பம் அருகே இருக்கும் எய்தனூர் பகுதியில் வசித்து வரும் விக்னேஷ்(25) என்ற இளைஞர் கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் அவரை கைது செய்த போலீசார். விக்னேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் வண்டி பாளையம் என்னும் பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருடன் இணைந்து அவர் திருட முயன்றதாகக் கூறியுள்ளார். இதனை அறிந்த அருள், போலீசாரின் வலையில் சிக்காமல் தலைமறைவாகி இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.