குடிபோதையில் தங்கை வீட்டில் வெடிகுண்டு வீசிய நபர் கைது.. வீட்டில் வளர்த்த நாய் உடல் சிதறி உயிரிழந்ததால் பரபரப்பு!

 

குடிபோதையில் தங்கை வீட்டில் வெடிகுண்டு வீசிய நபர் கைது.. வீட்டில் வளர்த்த நாய் உடல் சிதறி உயிரிழந்ததால் பரபரப்பு!

கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால், பல வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக மதுக்கடைகள் திறக்கப்பட்ட பிறகு வன்முறைகள் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் குடித்ததை தட்டிக் கேட்ட தங்கை வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் தங்கை வீட்டில் வெடிகுண்டு வீசிய நபர் கைது.. வீட்டில் வளர்த்த நாய் உடல் சிதறி உயிரிழந்ததால் பரபரப்பு!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள ராமகவுண்டன் பட்டியைச் சேர்ந்த முருகன், என்பவர் குடித்து விட்டு அவரது தங்கையிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளார். அதே போல நேற்று இரவும் சண்டை போட்டுள்ளார். இதனால் செல்வராணிக்கும் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த முருகன் தனது தங்கை வீட்டிலேயே, தனது நண்பரின் உதவியுடன் 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.

குடிபோதையில் தங்கை வீட்டில் வெடிகுண்டு வீசிய நபர் கைது.. வீட்டில் வளர்த்த நாய் உடல் சிதறி உயிரிழந்ததால் பரபரப்பு!

அந்த நாட்டு வெடிகுண்டுகள் விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படுமாம். அதனை முருகன் வீசியதால், செல்வராணியின் மகன்கள் இரண்டு பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். ஆனால், செல்வராணி வீட்டில் இருந்த நாய் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், முருகனை கைது செய்து தப்பியோடிய நண்பரை தேடி வருகின்றனர்.