பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து…சோஷியல் மீடியாக்களில் பரப்பிய நபர் கைது!

 

பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து…சோஷியல் மீடியாக்களில் பரப்பிய நபர் கைது!

பிரபல இணையத்தளத் தொடர் தயாரிப்பாளரின் மனைவி பெயரில் ஒரு போலியான ட்விட்டர் கணக்கு இருந்துள்ளது. அந்த கணக்கில் பெண்களின் படத்தை தவறாக சித்தரித்து வெளியிடுவதும், மத கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெளியிடுவதும் என தொடர்ந்து சமூக ஊடகங்களில் தவறான கருத்தை வெளியிட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக சமூக ஊடகப் பிரிவின் சார்பு ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து…சோஷியல் மீடியாக்களில் பரப்பிய நபர் கைது!

அந்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம்(33) என்பவர் தான் போலியான கணக்கு உருவாக்கி அதில் தவறான கருத்துக்களை வெளியிட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.