‘300 மதுபாட்டில்கள் கடத்தல்’ மடக்கி பிடித்து பறிமுதல் செய்த போலீசார்; ஒருவர் கைது!

 

‘300 மதுபாட்டில்கள் கடத்தல்’ மடக்கி பிடித்து பறிமுதல் செய்த போலீசார்; ஒருவர் கைது!

சட்டவிரோதமாக 300 மதுபாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் மதுவுக்கு இருக்கும் வரவேற்பை போல வேறு எதற்குமே கிடையாது. கொரோனா காலத்தில் மதுக்கடைகள் இல்லாமல் குடிமகன்கள் எவ்வளவு அல்லல்பட்டார்கள் என்பதை நாம் அனைவருமே பார்த்திருப்போம். குறிப்பாக கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை ஈடுகட்ட தான், மதுக்கடைகளை திறப்பதாக அரசே தெரிவித்தது. இவ்வாறாக தமிழகத்தில் மதுபிரியர்களும் மதுக்கடைகளும் அதிகரித்து வரும் அதே வேளையில், மது பாட்டில்கள் கடத்தலும் அதிகரித்து வருகிறது.

‘300 மதுபாட்டில்கள் கடத்தல்’ மடக்கி பிடித்து பறிமுதல் செய்த போலீசார்; ஒருவர் கைது!

இந்த நிலையில், சுமார் 300 மதுபாட்டில்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களை ஒரு நபர் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், மதுபாட்டில்கள் கடத்தப்பட்ட வாகனத்தை பின்தொடர்ந்த போலீசார் வாகனத்தை வழிமறித்து அந்த நபரை கைது செய்துள்ளனர். மேலும், அவர் கடத்திய மதுபாட்டில்களோடு சேர்த்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.