குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு தீவைத்துவிட்டு தாய் தற்கொலை! குழந்தைகள் தீயில் கருகி பலி

 

குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு தீவைத்துவிட்டு தாய் தற்கொலை! குழந்தைகள் தீயில் கருகி பலி

மதுரையில் குடும்பத்தகராறு இரண்டு குழந்தைகளுக்கு தீவைத்து விட்டு தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாயின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இரண்டு குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு வரணி ஸ்ரீ மற்றும் வர்ணிகா ஸ்ரீ ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவி இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டுவந்தது.

குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு தீவைத்துவிட்டு தாய் தற்கொலை! குழந்தைகள் தீயில் கருகி பலி

இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக நேற்று இரவு மனைவி தமிழ்ச்செல்வி தன்னுடைய இரண்டு குழந்தைகள் மீது தீ வைத்து தனக்கும் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தமிழ்ச்செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை அவரும் உயிரிழந்தார். இதுதொடர்பாக மதுரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.