வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் தகராறு! விஷம் குடித்து உயிரிழந்த இளம்பெண்!!

 

வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் தகராறு! விஷம் குடித்து உயிரிழந்த இளம்பெண்!!

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அமராவதி விளையில் உள்ள ரோஜ் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஓமன் நாட்டில் உள்ள எண்ணெய் கம்பெனி ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆக்னஸ் நந்தா (31) இவர்களுக்கு திருமணமாகி ஐந்தரை ஆண்டுகள் ஆகின்றன. நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கணவர் வெளிநாட்டில் இருப்பதால், ஆக்னஸ் நந்தா தன் தாய் தந்தையருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக செல்வராஜாவுக்கும் நந்தாவுக்கும் இடையே செல்போனில் பேசியபடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று கணவருடன் வீடியோ கால் மூலமாக பேசிக்கொண்டிருக்கும்போது தகராறு முற்றியதால் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும்போதே விஷம் குடித்தார்/ இதனை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.