‘போலீஸ் ஸ்டேஷன் வாயிலில்’ பெண் கத்தியால் குத்திக்கொலை :பதைபதைக்கும் சம்பவம்!

 

‘போலீஸ் ஸ்டேஷன் வாயிலில்’ பெண் கத்தியால் குத்திக்கொலை :பதைபதைக்கும் சம்பவம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, சந்தனக் கடத்தலை காட்டிக் கொடுத்த மலைவாழ் பெண் ஒருவர், நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் ஒரு பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

‘போலீஸ் ஸ்டேஷன் வாயிலில்’ பெண் கத்தியால் குத்திக்கொலை :பதைபதைக்கும் சம்பவம்!

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் இருக்கும் மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவர் ஏன் கொல்லப்பட்டார்? அந்த பெண் யார்? காவல் நிலையத்துக்கு முன்பே அந்த பெண் படுகொலை செய்யப்பட்டதன் காரணம் என்ன? உள்ளிட்ட எந்த தகவலும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.