ஈரோட்டில் பெரியார் சிலை மீது சாயம் தெளிக்க முயன்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!

 

ஈரோட்டில் பெரியார் சிலை மீது சாயம் தெளிக்க முயன்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!

ஈரோட்டில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் தெளிக்க முயற்சித்த இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பை தொடர்ந்து ஈரோட்டில் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் காவலையும் மீறி பெரியார் சிலையை நோக்கி முழக்கமிட்டப்படி சென்ற பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவரின் பிரகாஷ்க்கு 45 என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு நடக்கவிருந்த சம்பவம் தடுக்கப்பட்டது.

கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பதிவிடப்பட்டதிலிருந்து கடவுள் ரீதியிலான சச்சரவுகள், பெரியார் சிலை சேதம் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

ஈரோட்டில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிந்திருந்தார். இந்நிலையில் அதே ஈரோட்டில் இன்று இந்து முன்னணி கட்சியை சேர்ந்த ஒருவர் மீண்டும் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்ற முயற்சித்து இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.