காதலன் திருமணத்தை தனி ஆளாக நிறுத்த முயன்ற காதலி

 

காதலன் திருமணத்தை தனி ஆளாக நிறுத்த முயன்ற காதலி

திருவாரூர் அருகே காதலித்து ஏமாற்றிய நபருக்கு வேறு பெண்ணுடன் நடைபெற்ற திருமணத்தை நிறுத்த முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

காதலன் திருமணத்தை தனி ஆளாக நிறுத்த முயன்ற காதலி

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே நல்லிச்சேரி சேர்ந்தவர் முருகையன் இவரது மகள் செல்வி(32). இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது திருவாரூர் மாவட்டம் செம்மங்குடியை சேர்ந்த செந்தில் முருகன் (31)என்பவர் சென்னையில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்த போது செல்வியிடம் பழகி திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றியதாகவும், இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்த செந்தில்முருகன் தற்போது சொந்த ஊர் திரும்பிய நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற திட்டமிட்டுள்ளதாக கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் செந்தில் முருகனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த மண்டபத்துக்குள் செல்வி நுழைய முயன்றார். அப்போது போலீசார் செல்வியை தடுத்து நிறுத்தினர், இதனிடையே திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்களுக்கும் செல்விக்கும் தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் செல்வியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிசாரித்தனர்.