காதலிக்கக்கூறி வற்புறுத்திய ஒருதலை காதலன்… விரக்தியில் இளம்பெண் தற்கொலை

 

காதலிக்கக்கூறி வற்புறுத்திய ஒருதலை காதலன்… விரக்தியில் இளம்பெண் தற்கொலை

ஆரணி அருகே இளம்பெண்ணை காதலிக்க கூறி ஒருதலைக் காதலன் மிரட்டல் விடுத்ததால் விரக்தியில் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சித்தார்.

ஆரணி அடுத்த மோட்டுக்குடிசை கிராமத்தைச் சேர்ந்த சந்தியா(21), சென்னையில் தனியார் மருத்துவமனை செவிலியராக பணியாற்றிவருகிறார். பக்கத்து கிராமமான தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் கோதண்டராமன் (25). இவர் சந்தியாவை ஒருதலைப்பட்சமாக காதலித்துள்ளார். தன்னுடைய காதலை சந்தியாவிடம் தெரிவித்தபோது காதலை சந்தியா ஏற்க மறுத்துள்ளார்.

காதலிக்கக்கூறி வற்புறுத்திய ஒருதலை காதலன்… விரக்தியில் இளம்பெண் தற்கொலை

எனக்கு கிடைக்கவில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என கோதண்டராமன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்து சந்தியா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.