வீட்டில் வேலை செய்யாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த மகள்… பெற்றோர் திட்டியதால் தற்கொலை!

 

வீட்டில் வேலை செய்யாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த மகள்… பெற்றோர் திட்டியதால் தற்கொலை!

காஞ்சிபுரத்தில் வீட்டில் வேலை செய்யாமல் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த மகளை பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் வேலை செய்யாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த மகள்… பெற்றோர் திட்டியதால் தற்கொலை!

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள கோட்ராம்
பாளையத்தில் தெருவோரம் உணவகம் ஒன்று உள்ளது. அதன் உரிமையாளருக்கு 17 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவர், வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் டி.வி.பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா காரணத்தால் 8 மாதங்களாக பள்ளி மூடப்பட்டுள்ள நிலையில் வீட்டில் உள்ள நிலையில் டிபன் கடை வேலைகளையும் சரிவர செய்யாமல் இருந்துள்ளார்.

இதனால் அவரது பெற்றோர் தங்களது மகளை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த சிறமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.