ஸ்வேதா கொலையின் பகீர் பின்னணி- ரயிலில் தொடங்கிய காதல்…

 

ஸ்வேதா கொலையின் பகீர் பின்னணி- ரயிலில் தொடங்கிய காதல்…

சென்னை தாம்பரம் அருகே இரயில்வே குடியிருப்பு பகுதியில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞரும் கழுத்து அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்வேதா கொலையின் பகீர் பின்னணி- ரயிலில் தொடங்கிய காதல்…

கொலையாளி ராமச்சந்திரன் திருவாரூா் மாவட்டம் திருக்குவளையை சோ்ந்தவா். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவா், கூடுவாஞ்சேரியில் தங்கி, மறைமலைநகரில் அருகே உள்ள ஃபோா்டு காா் கம்பெனியில் சப் காா்ண்டிரகட் எடுத்து பணி செய்து வருகிறாா். கல்லூரி மாணவி குடும்பம் குரோம்பேட்டையில் வசித்து வந்தாலும்,அவா்களுடைய பூா்வீகம் மயிலாடுதுறை. கடந்த 2019 ஆம் ஆண்டு ராமச்சந்திரன் தாம்பரத்திலிருந்து ரயிலில் அவா்களுடைய சொந்த ஊருக்கு சென்றாா். அதே ரயிலில் ஸ்வேதாவும் அவா்களுடைய சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்றாா். அப்போது இவா்களுக்குள் ஏற்பட்ட ரயில் நட்பு, அதன்பின்பு காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாக ராமச்சந்திரனை சந்தித்து பேசுவதை ஸ்வேதா தவிா்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதோடு ராமச்சந்திரன் போன் செய்தால், ஸ்வேதா எடுப்பது கிடையாது. இது ராமச்சந்திரனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஸ்வேதா வேறு யாரிடமோ பேசுகிறாா். எனவே தான்,தன்னிடம் பேசுவதை படிப்படியாக குறைத்து கொண்டதாக ராமச்சந்திரன் நினைத்தாா். நேற்று இரவும் ராமச்சந்திரன் போன் செய்தபோது நீண்ட நேரமாக ஸ்வேதாவின் போஸ் பிசியாகவே இருந்துள்ளது.

இந்த பிரச்னைக்கு இன்று முடிவுகட்ட வேண்டும் என்ற ஆத்திரத்துடன், தாம்பரம் கிறிஸ்தவ தல்லூரி வாசலில் காத்திருந்தாா் ராமசந்திரன். பகல் 1.30 மணிக்கு கல்லூரியிலிருந்து ஸ்வேதா வெளியே வந்ததும்,ராமச்சந்திரனும் ஸ்வேதாவுடன் பேசிக்கொண்டே ரயில்நிலைய வளாகத்திற்குள் வந்தனா். அங்கு மரத்தடியில் நின்று இருவரும் பேசினா். வேறு யாரையாவது காதலிக்கிறாயா? என்று ஆத்திரத்துடன் கேட்டுள்ளாா். இதனால் ஸ்வேதாவும் ஆத்திரத்துடன்,இதைப்போல் சந்தேகப்பட்டால், என்னிடம் இனிமேல் பேசாதே என்று கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன்,பேண்ட் பாக்கேட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை ஆவேசமாக எடுத்து ஸ்வேதா கழுத்தை அறுத்துவிட்டு, தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டாா். இதுகுறித்து சேலையூா் போலீசாா் மேலும் விசாரணை நடத்து வருகின்றனா்.