சினிமா பட பாணியில் மாணவனை கடத்திய கும்பல் : விசாரணையின் அம்பலமான உண்மை!

 

சினிமா பட பாணியில் மாணவனை கடத்திய கும்பல் : விசாரணையின் அம்பலமான உண்மை!

திருவள்ளூர் அருகே சினிமா பட பாணியில் 12ம் வகுப்பு மாணவனை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் கணேஷ். இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று கணேஷை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றுள்ளது. கடத்தல் கும்பலைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் காரில் ஏறுவதற்குள்ளே கார் புறப்பட்டதால், அந்த நபர் பொதுமக்கள் வசம் சிக்கினார். அவரை பொதுமக்கள் செங்குன்றம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

சினிமா பட பாணியில் மாணவனை கடத்திய கும்பல் : விசாரணையின் அம்பலமான உண்மை!

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னையால் மாணவனை கடத்தியதாக தெரிவித்திருக்கிறார். இதனிடையே, அச்சிருப்பாக்கம் போலீசார் மாணவனை கடத்திய காரை தடுத்தி நிறுத்தி 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த பூபதி என்ற நபர் கணேஷின் அக்கா ஜமுனாவை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் 4 மாதம் குடும்பம் நடத்திய பிறகு ஜமுனாவின் பெற்றோர் அவரை அழைத்து சென்றதாகவும் மனைவியை பிரிந்த ஆத்திரத்தில் பழிவாங்குவதற்காக கணேஷை கடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த கடத்தல் கும்பலிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். சினிமா பட பாணியில் மாமாவே மச்சானை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.