மதுரையில் மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 11,717 ஆக அதிகரிப்பு!

 

மதுரையில் மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று :  பாதிப்பு எண்ணிக்கை 11,717 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,175 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,73, 460 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று :  பாதிப்பு எண்ணிக்கை 11,717 ஆக அதிகரிப்பு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 5ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

மதுரையில் மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று :  பாதிப்பு எண்ணிக்கை 11,717 ஆக அதிகரிப்பு!

அதன்படி மதுரையில் காலை 7 மணி நிலவரப்படி மேலும் 70 பேருக்கு கொரோனா உறுதியாகியது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11,660 ஆக அதிகரித்தது.

மதுரையில் மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று :  பாதிப்பு எண்ணிக்கை 11,717 ஆக அதிகரிப்பு!

இந்நிலையில் மதுரையில் தற்போது மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11,717 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு 100 ஐ தாண்டியுள்ளது.