திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, ரூ.3.86 கோடி அபராதம் விதிப்பு

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, ரூ.3.86 கோடி அபராதம் விதிப்பு

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக 3 கோடியே 86 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டு உள்ளதாக, மவாட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி ஒன்றாம் முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை, போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகள் மீது, 2 லட்சத்து 94 ஆயிரத்து 789 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்குகளுக்கு 3 கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, ரூ.3.86 கோடி அபராதம் விதிப்பு

அபராத தொகையினை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செலுத்த அறிவுறுத்திய அவர், கார்டு இல்லாதவர்கள் இ-சலான் ரசீதில் உள்ள எண் அல்லது வாகன பதிவு எண் மற்றும் வாகன இன்ஜின் எண்ணை கொண்டு இணைய வழியில் எஸ்பிஐ வங்கியிலும், நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம் என தெரிவித்தார். மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் இனி சாலைவிதிகளை மீறுபவர்கள், அனைவருக்கும் விதிக்கப்படும் அபராத தொகையானது, ‘பணமில்லா பரிவர்த்தனை’ மூலமாகவே வசூலிக்கப்படும் என்றும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் இனி அபராத தொகையை பணமாக செலுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுகொண்டார்