ரூ.2 லட்சம் கடனுக்காக மகளையே விற்ற தந்தை : பாலியல் வன்கொடுமையால் கதறும் இளம்பெண்!

 

ரூ.2 லட்சம் கடனுக்காக மகளையே விற்ற தந்தை : பாலியல் வன்கொடுமையால் கதறும் இளம்பெண்!

மீரட் அருகே கடனை திருப்பிச் செலுத்த முடியாத நபர் ஒருவர், தனது மகளை விற்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம், பார்த்தாபூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தன்னை தனது பெற்றோர் ரூ.2 லட்சத்துக்கு விற்றதாக தனது தாயுடன் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். தன்னை விற்க வேண்டாம் எனக் கூறியதால், தனது தாயரையும் தந்தை இரும்புக் கம்பியால் தாக்கியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.2 லட்சம் கடனுக்காக மகளையே விற்ற தந்தை : பாலியல் வன்கொடுமையால் கதறும் இளம்பெண்!

இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதில், சதாப்திநகர் பகுதியில் வசித்து வரும் அந்த நபர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்ததும் பல வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. அதோடு, பராத் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு நபரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதும் அதை திருப்பி செலுத்த முடியாததால் தனது மகளையே அந்த நபருக்கு விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்ணை வாங்கிக் கொண்ட அந்த நபர் ஒரு வருடம் பாலியல் வன்கொடுமை செய்ததும் அண்மையில் அந்த பெண் அங்கிருந்து தப்பி வந்து தனது தாயுடன் தஞ்சமடைந்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.