உ.பி. பெண் பாலியல் வன்கொடுமை : போலீசாரே உடலை தகனம் செய்தற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

 

உ.பி. பெண் பாலியல் வன்கொடுமை :  போலீசாரே உடலை தகனம் செய்தற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

உ.பி பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது. இதனால் நிலைகுலைந்து போன அந்த பெண் டெல்லியிலுள்ள ஜவர்கஹலால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

உ.பி. பெண் பாலியல் வன்கொடுமை :  போலீசாரே உடலை தகனம் செய்தற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததுடன், அவரின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டிருந்தது. கொடூரமான தாக்குதல்களுக்கு ஆளான அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் நேற்று சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார், உண்மைகள் அடக்கப்படுகின்றன; பெண்ணின் இறுதி சடங்குக்கான உரிமையும் அவளது குடும்பத்தில் இருந்து பறிக்கப்படுவது அநியாயமானது” என்று பதிவிட்டுள்ளார்.

உ.பி. பெண் பாலியல் வன்கொடுமை :  போலீசாரே உடலை தகனம் செய்தற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

இதனிடையே உடற்கூறாய்வுக்கு பின் இளம் பெண் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல விடாமல் காவல்துறையினரே அவசர அவசரமாக இறுதி சடங்குகளை செய்து தகனம் செய்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.