மேலும் ஒரு கல்லூரி மாணவர் கடலில் சிக்கி உயிரிழப்பு!

 

மேலும் ஒரு கல்லூரி மாணவர் கடலில் சிக்கி உயிரிழப்பு!

சென்னையில் மீண்டும் ஒரு கல்லூரி மாணவர் கடல் அலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் சென்னை கடற்கரைகளில் ராட்சச அலையில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒரு கல்லூரி மாணவர் கடலில் சிக்கி உயிரிழப்பு!

சென்னை ஐயானவரத்தை சேர்ந்தவர் சுஷாந்த் (20). இவர் எம்.சி.சி கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு தனது குடும்பத்துடன் வந்து கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அலையிலன் சீற்றம் அதிகரிக்க ராட்சச அலையில் சிக்கிய கல்லூரி மாணவன் ஒரு மணி நேரமாக காணாமல் போனார்.

பின்னர் 3 மணியளவில் பெசன்ட் நகர் போலீஸ் பூத் பின்புறம் உள்ள கடற்கரையில் மாணவனின் உடல் கரை ஒதுங்கியது. சுஷாந்த் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். ஏற்கனவே கடந்த மாதம் 21 தேதி மெரினாவில் மூன்று பேர் மற்றும் கடந்த வாரத்தில் மேத்யூ என்ற இளைஞர் திருவான்மியூர் கடற்கரை அலையில் சிக்கி பரிதாமாக உயிரிழந்த நிலையில் மற்றொரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.