தின்பண்டம் என நினைத்து வெடிமருந்தை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழப்பு.. திருச்சி அருகே நேர்ந்த சோகம்!

 

தின்பண்டம் என நினைத்து வெடிமருந்தை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழப்பு.. திருச்சி அருகே நேர்ந்த சோகம்!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அலகரை கிராமத்தில் வசித்து வரும் பூபதி என்பவரின் மகன் விஷ்ணுதேவ்(6). பூபதியின்நண்பர்களான கங்காதரன், தமிழரசன், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரும் நேற்று பாப்பாபட்டி பகுதியில் நாட்டு வெடிகளை வாங்கிக் கொண்டு மணமேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அந்த நாட்டு வெடிகளை வீசி மீன் பிடித்த அவர்கள், மீதம் இருந்த ஒரு வெடியையும் மீன்களையும் எடுத்துக் கொண்டு பூபதி வீட்டுக்கு சென்று அங்கிருந்த கட்டிலில் அதை வைத்து விட்டு மீன்களை கழுவ சென்றுள்ளனர்.

தின்பண்டம் என நினைத்து வெடிமருந்தை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழப்பு.. திருச்சி அருகே நேர்ந்த சோகம்!

அப்போது அங்கு சென்ற சிறுவன் அதனை தின்பண்டம் என நினைத்து, எடுத்து கடித்ததில் நாட்டுவெடி வெடித்துள்ளது. இந்த விபத்தில் சிறுவன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் சிக்கல் ஆகி விடும் என்று எண்ணிய பெற்றோர் சிறுவனின் உடலை வீட்டின் அருகே இருந்த சுடுகாட்டில் எரித்துள்ளனர். இது தொடர்பாக எழுந்த புகாரில், தொட்டியம் போலீசார் கங்காதரன், தமிழரசன், மோகன்ராஜ் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.