கொரோனாவுடன் ஊரெல்லாம் சுற்றி திரிந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு!

 

கொரோனாவுடன் ஊரெல்லாம் சுற்றி திரிந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு!

கொரோனா பாதித்த சிறுவன் மீது பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் இலுப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுடன் ஊரெல்லாம் சுற்றி திரிந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் ஆம்ஸ்டிராங். 17 வயதுடைய இந்த சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும் அவர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறாமல் நோய் தொற்றை பரப்பும் வகையில் பொது இடங்களில் சுற்றித் திரிவதாக இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட சிறுவன் மீது இலுப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.