சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய தம்பதி…

 

சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய தம்பதி…

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் கிருபாகரன். இவர் தனது மனைவி உடன் நேற்று திருப்பூருக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். சத்தியமங்கலம் அடுத்த நேரு நகர் அருகே சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது.

சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய தம்பதி…

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காரை உடனடியாக நிறுத்திவிட்டு இருவரும் வெளியேறி உயிர் தப்பினர். இந்த நிலையில், தீயானது மளமளவென கார் முழுமையாக பரவி, பற்றி எரிந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சாலையில் பற்றி எரிந்த காரை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.