’54 பேர் பயணித்த’ பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து : ம.பி அருகே பரபரப்பு!

 

’54 பேர் பயணித்த’ பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து : ம.பி அருகே பரபரப்பு!

மத்திய பிரதேசம் சித்தி பகுதியில் இருந்து சத்னாவை நோக்கி 54 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அப்பகுதியில் இருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனே மீட்புப்படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

’54 பேர் பயணித்த’ பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து : ம.பி அருகே பரபரப்பு!

விரைந்து வந்த மீட்புப்படையினர், கால்வாயில் இருந்து 7 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். அவர்கள் தற்போது அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியிருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

’54 பேர் பயணித்த’ பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து : ம.பி அருகே பரபரப்பு!

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து குறித்த முழு விவரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பேருந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.