சிறுமியை 4 மாத கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான வாலிபர்!

 

சிறுமியை 4 மாத கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான வாலிபர்!

சென்னை அருகே உள்ள மாங்காட்டில் 17 வயது சிறுமியை திருமண ஆசைக்காட்டி, 4 மாதம் கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளியை தேடி வருகின்றனர்.

சிறுமியை 4 மாத கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான வாலிபர்!

மாங்காடு,வடக்கு மலையம்பாக்கத்தில் சூர்யா என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு சூர்யா, சிறுமியிடம் திருமண ஆசையை வளர்த்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானதையடுத்து, சூர்யா தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக உள்ளத்தை அறிந்த அவரது பெற்றோர், விசாரித்ததில் சூர்யாவிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பூவிருந்தவல்லி மகளிர் காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சூர்யா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சூர்யாவை தேடிவருகின்றனர்.