ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் 9 ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்த புது மாப்பிள்ளை!

 

ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் 9 ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்த புது மாப்பிள்ளை!

மதுரையில் திருமணம் ஆன நிலையில், ஓரினச்சேர்க்கைக்கு மாணவன் மறுத்ததால் அவரை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் நடத்திய புதுமாப்பிள்ளையை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆட்டுகுளம் செல்வி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் பாண்டியம்மாள் தம்பதிகளின் மகன் வினித். இவர் மதுரையில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார், தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவர் வினித் நண்பர்களுடன் விளையாட செல்வதாகக் கூறிச் சென்றுள்ளான். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள சுடுக்காடு அருகே உள்ள புதர் பகுதியில் மாணவன் வினித் இறந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதிக்கு சிறுவர்கள் ஊர் மக்களிடம் வந்து தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து ஊர் மக்கள், மாணவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து உடனே அப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது மாணவன் உடலில் காயங்களுடனும் கை மணிக்கட்டு பகுதி அறுக்கப்பட்டு கிடந்ததையடுத்து, மாணவன் உடலை மீட்டு தனியார் வாகனத்தில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவன் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் 9 ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்த புது மாப்பிள்ளை!

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனை வந்த மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையிலான காவல்துறையினர் உயிரிந்த மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் உடற்கூராய்வுக்காக மாணவன் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் கழுத்து நெறிக்கப்பட்டு, கை மணிக்கட்டு அறுக்கப்பட்டு இருப்பதுடன், மாணவனின் பிறப்பு உறுப்பு மற்றும் உடலின் பின்பகுதியிலும் காயங்கள் இருப்பதால், மாணவன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக மாணவனை விளையாட அழைத்துச் சென்ற அதேபகுதியைச் சேர்ந்த கருப்பையா, பெரியசாமி, விஜய், கார்த்திக், தங்கராஜ் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், இறந்த மாணவன் வினித்தின் உறவினரான கருப்பையாவிற்கும் (22) மாணவன் வினித்திற்கும் தன்பால் உறவு நீண்ட நாட்களாக இருந்தது வந்துள்ளது. இந்நிலையில் இருவரும் ஒன்றாக சுற்றுவதை இரண்டு வீட்டு பெற்றோர்களும் கண்டித்து, கருப்பையாவிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன் திருமணம் செய்துவைத்தனர். ஆனால் கருப்பையாவிற்கு தனது மனைவியுடன் இல்லறத்தில் வாழ விருப்பமில்லை.

ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் 9 ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்த புது மாப்பிள்ளை!

மாணவன் வினித்துடன் மீண்டும் பழக்கம் வைத்து சுற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் வினித்தின் பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். தொடர்ந்து மாணவன் வினித் கருப்பையாவுடன் சில நாட்களாக பேசமால் இருந்த நிலையில், நேற்று வினித்தை அப்பகுதியில் உள்ள தனிமையான இடத்திற்கு கருப்பையா அழைத்துச் சென்று அங்கு உறவுக்கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் வினித் அதற்கு மறுத்ததால் குடிபோதையில் இருந்த கருப்பையா தான் வைத்திருந்த துண்டால் மாணவன் வினித்தின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், என்ன செய்வது என்று திகைத்த கருப்பையா மாணவன் தற்கொலை செய்தது போல் மாற்றலாம் என்ற எண்ணத்தில், அப்பகுதியில் குடித்துவிட்டு கிடந்த மதுபாட்டிலின் உடைந்த துண்டுகளால் மாணவன் வினித்தின் கை மணிக்கட்டு பகுதியை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து கருப்பையாவை கைது செய்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்