50 வயது நபர் கொரோனாவால் தேனி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு!
Jul 12, 2020, 08:35 IST1594523123000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி மேலும் 154 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,648 ஆக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் வரும் 13 ஆம் தேதி அதாவது நாளைமுதல் இந்த மாத 27 ஆம் தேதி வரை கொரோனொவை கட்டுப்படுத்தும் விதமாக முழுகடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த 50 வயது நபர் கொரோனாவால் தேனி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.