மளிகை கடையில் பணிபுரிந்த சிறுமியை வன்கொடுமை செய்த உரிமையாளர்!

 

மளிகை கடையில் பணிபுரிந்த சிறுமியை வன்கொடுமை செய்த உரிமையாளர்!

கோவையில் மளிகை கடையில் வேலைப்பார்த்து வந்த 16 வயதுடைய சிறுமியிடம் பாலியல் வன்புணர்வை தூண்டும் விதமாக ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மளிகை கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

மளிகை கடையில் பணிபுரிந்த சிறுமியை வன்கொடுமை செய்த உரிமையாளர்!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி கோவை பி.என்.பதூர் பகுதியில் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். சிறுமியை உறவினர் அதே பகுதியில் இயங்கி வரும் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான மளிகைகடையில் வேலைக்காக சேர்த்துள்ளார். கடந்த சில நாட்களாக கடைக்கு வாடிக்கையாளர்கள் வராதபோது, கடையின் உரிமையாளர் ராமலிங்கம் சிறுமியிடம் வன்புணர்வை தூண்டும் வகையிலும் ஆபாசமாக பேசியதாகவும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக சிறுமி தனது உறவினரிடம் கூற அந்த சிறுமியின் உறவினர் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குபதிவுசெய்த போலீசார், ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையலடைத்தனர்