சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவன்; போக்சோவில் கைது

 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவன்; போக்சோவில் கைது

சேலம் அருகே 7 வயது சிறுமியை 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுமி 2ம் வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்ற நிலையில், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியின் விசாரித்ததில் எதிர் வீட்டில் இருக்கும் 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவன்; போக்சோவில் கைது

அதனால் சிறுவன் மீது சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் கூலிவேலை செய்து வருவதாகவும் கடந்த சனிக்கிழமை சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வெளியே சொல்லக் கூடாது என மிரட்டியதாகவும் சிறுவன் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.