சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்!!

 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்!!

14வயது சிறுமியை 12 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமியை 12 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித் ப்ரியா புகாரின் பேரில் 11 பேரிடம் திருச்செங்கோடு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளிட்ட 11 பேரை அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்!!

உலகளவில் மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பாலியல் வன்முறைகளை அனுபவித்திருக்கிறார் என்பது உலக சுகாதார அமைப்பின் ஆய்வு மூலம் தெரியவந்த உண்மை. பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் தொடுவது உள்ளிட்டவையும் இதில் அடங்கும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கான சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக்காத பட்சத்தில் இதுபோன்ற குற்றங்கள் குறையாது என்பது பலரின் கருத்து.தமிழகத்தை பொறுத்தவரையில் தினந்தோறும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் நடந்த பொள்ளாச்சி சம்பவம், அயனாவரம் சிறுமி வன்கொடுமை சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்கள் நமது அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது.