தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

 

தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

சத்தியமங்கலம் அருகே வலைக்குள் பதுங்கியிருந்த சுமார் 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


விட்டனர். சத்தியமங்கலம் அடுத்த பெரியகுளம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில்‌ அமைக்கப்பட்ட பென்சிங் வலை அருகே மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. தனது தோட்டத்திற்கு நீர்பாய்ச்ச சென்றபோது மலைப்பாம்பு பதுங்கியிருப்பதை கண்ட, சுப்பிரமணி, இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு வலைக்குள் பதுங்கியிருந்த சுமார் 12 அடி நீளமும், 30 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது