கண்மாயில் தவறி விழுந்து, பள்ளி மாணவர் பலி!

 

கண்மாயில் தவறி விழுந்து, பள்ளி மாணவர் பலி!

சிவகங்கை

தேவக்கோட்டை அருகே கண்மாயில் மீன்பிடித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அடுத்த அம்மச்சி ஊரணி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் ராஜகௌதம் (13). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ராஜகவுதம் நேற்று தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள நாட்டாண் கண்மாய்க்கு மீன்பிடிக்க சென்றார்.

கண்மாயில் தவறி விழுந்து, பள்ளி மாணவர் பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்த அவர், நீரில் மூழ்கி மாயமாகினார். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் தேவக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கண்மாயின் இறங்கி தேடியபோது சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்ந்து, தேவகோட்டை தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து ராமநாதன் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.