கல்குவாரி குட்டையில் மூழ்கி தனியார் பள்ளி மாணவர் பலி!

 

கல்குவாரி குட்டையில் மூழ்கி தனியார் பள்ளி மாணவர் பலி!

விருதுநகர்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த தனியார் பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சீனியாபுரத்தை சேர்ந்தவர் இன்பம். இவரது மகன் பிரியன் (14). இவர் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா விடுமுறையால் வீட்டில் இருந்த பிரியன், நேற்று அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் பந்தப்பாறை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றார்.

கல்குவாரி குட்டையில் மூழ்கி தனியார் பள்ளி மாணவர் பலி!

குட்டையில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற பிரியன், நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள், ஶ்ரீவில்லிபுத்தூர் தியணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குட்டையில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒன்றரை மணி நேர தேடுதலுக்கு பின்னர், அவர்கள் சிறுவன் பிரியனை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். இதனை அடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ஶ்ரீவல்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய டவுன் போலீசார், இதுகுறித்து இன்பம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.