ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 97 வயது மூதாட்டி: பரபரப்பு சம்பவம்!

 

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 97 வயது மூதாட்டி: பரபரப்பு சம்பவம்!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த 97 வயதான மூதாட்டி முருகம்மாளுக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இவரது மகன் ரங்கசாமி அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இன்று காலை தனது மகள்களுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற மூதாட்டி, திடீரென தனது மகள்களுடன் தீக்குளிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 97 வயது மூதாட்டி: பரபரப்பு சம்பவம்!

இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முருகம்மாளுக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அதனை அவரது மகன் ரங்கசாமி ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டதாகவும் அண்மையில் அவர் உயிரிழந்து விட்டதால் அவரது மனைவியும் மகன்களும் நிலத்தை கொடுக்க மறுப்பதோடு தங்களை கொடுமை படுத்துவதாகவும் கூறியுள்ளனர். மேலும், இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்னர்.

மூதாட்டியின் புகாரை ஏற்ற அப்பகுதி தாசில்தார் சந்திரா, தான் அந்த பிரச்னையை முடித்து வைப்பதாக உறுதியளித்ததன் பேரில் மூதாட்டியும் மூதாட்டியின் மகள்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.