திருப்பூரில் 950 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

 

திருப்பூரில் 950 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

மத்திய அரசின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் பிரதம மந்தியின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் முறைகேடாக பெற்ற பல கோடி ரூபாய் மீண்டும் திரும்ப பெறப்பட்டு வருகிறது.

திருப்பூரில் 950 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

இந்நிலையில் திருப்பூரில் 950 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட 950 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து இதுவரை 40 லட்சம் பெறப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

திருப்பூரில் 950 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை இதுவரை 13 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 12 லட்சம் பேர் முறைகேட்டில் ஈடுப்பட்டது கண்டறியப்பட்ட நிலையில் 43 ஆயிரம் பேரிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் விழுப்புரம் கிசான் திட்டத்தில் மோசடி செய்த 19 ஆயிரம் பேரிடம் இருந்து இதுவரை 7.25 கோடி பணம் வசூலிக்கப்பட்டது.