93 கொலைகள் செய்த 74 வயது முதியவர்; கொலை செய்து பெண்களுக்கு விடுதலை தந்ததாக பகீர் வாக்குமூலம் !

 

93 கொலைகள் செய்த 74 வயது முதியவர்; கொலை செய்து பெண்களுக்கு விடுதலை தந்ததாக பகீர் வாக்குமூலம் !

அமெரிக்காவில் 3 கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் 93 கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளத போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த 2014-ம் ஆண்டு 3 பெண்களை கொலை செய்த வழக்கல் சாமுவேல் லிட்டில் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த 50 ஆண்டுகளில் 93 கொலைகளை சாமுவேல் செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க வரலாற்றில் ஒரு சீரியல் கில்லர் இவ்வளவு கொலைகளை செய்வது இதுவே முதல்முறை என அமெரிக்காவின் விசாரணை அமைப்பான எஃப்.பி. தெரிவித்துள்ளது. சாமுவேலிடம் சுமார் 700 மணிநேரம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

93murder

நல்ல ஓவியரான சாமுவேல் தன்னால் கொலை செய்யப்பட்ட பெண்கள், இடங்கள் அனைத்தையும் தனது ஓவியத்தாலேயே வரைந்து காட்டியுள்ளார் என்றால் பாருங்களேன். மேலும் அவரால் கொல்லப்பட்ட பெண்கள் யார் என்ற விவரங்களையும் போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. சாமுவேலால் கொல்லப்பட்ட பெண்கள் விபத்தில்தான் இறந்ததாக இதுநாள் வரை வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவம், இந்த வழக்குகளில் பல இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். தான் செய்த கொலைகளை பற்றி கூறும் சாமுவேல் கொலையில் ஈடுபடும் பழக்கம் தனக்கு மனநிறைவை தருவதாகவும் அதனால் பேல பேர் விடுதலை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சாமுவேல் கொலை செய்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.