கோவை விமான நிலையத்தில் தொழிலதிபரிடம் 92 தோட்டாக்கள் பறிமுதல்… போலீசார் விசாரணை!

 

கோவை விமான நிலையத்தில் தொழிலதிபரிடம் 92 தோட்டாக்கள் பறிமுதல்… போலீசார் விசாரணை!

கோவை

கோவை விமான நிலையத்தில் திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் அனுமதியின்றி எடுத்துவந்த 92 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவையில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகளின் உடைமைகளை சி.எஸ்.ஐ.எப் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் சசிகுமார் என்பவர், தனது கைப் பையில் ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கியும், 92 துப்பாக்கி தோட்டக்களும் வைத்திருந்து தெரிய வந்தது.

கோவை விமான நிலையத்தில் தொழிலதிபரிடம் 92 தோட்டாக்கள் பறிமுதல்… போலீசார் விசாரணை!

இதனை அடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து சசிகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நிலையில், அவரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு சசிகுமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சசிகுமார் திருப்பூரில் பனியன் தொழில் செய்து வருவதும், துப்பாக்கிக்கு அனுமதி பெற்று 3 ஆண்டுகளாக வைத்துள்ள நிலையில், அலட்சியமாக தோட்டாக்களை உடன் எடுத்து வந்ததாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவரிடம் பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.