மகனுடன் ஆபாச புகைப்படம்.. பாடகிக்கு 90 நாள் சிறை
தனது 7 வயது மகனின் பிறந்த நாள் பரிசு என்று சொல்லி மகனுடன் ஆபாசமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பாப் பாடகி ரோஸ்மண்ட் ப்ரவுனுக்கு 90நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
கானா நாட்டை சேர்ந்த பாப் பாடகி ரோஸ்மண்ட் ப்ரவுன் எனும் அகுப்பம் போலோ. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது 7வயது மகன்பிறந்த தினத்தன்று மகனுடன் ஆடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரத்தில் கானா தலைநகரில் உள்ள அக்ரா நீதிமன்றம், ஆபாம் -வன்முறைக்கு கீழான சட்டத்தின் கீழ் இது குடும்ப வன்முறைக்குள் அடங்கும் என்று அகுப்பம் போலோவுக்கு 90 நாள் சிறைதண்டனை விதித்திருக்கிறது.
ஆபாசமான விசயங்களை வெளியிடுவது, தனிநபரின் ஒருமைப்பாட்டை குறைத்து மதிப்பிடுவது, சுய கவுரவத்திற்கு தீங்கிழைக்கும் வீட்டு வன்முறை ஆகிய மூன்று குற்றங்களுக்காக இந்த மூன்று மாத சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.