9000 கோடி மோசடி பன்னிட்டு உலகக் கோப்பை போட்டியை கண்டுகளிக்கும் மல்லையா!

 

9000 கோடி மோசடி பன்னிட்டு உலகக் கோப்பை போட்டியை கண்டுகளிக்கும் மல்லையா!

9000 கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள மல்லையா, லண்டனில் நடைபெற்றுவரும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை ஆட்டத்தை ஓவல் மைதானத்தில் உற்சாகத்துடன் கண்டுகளித்துவருகிறார். 

9000 கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள மல்லையா, லண்டனில் நடைபெற்றுவரும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை ஆட்டத்தை ஓவல் மைதானத்தில் உற்சாகத்துடன் கண்டுகளித்துவருகிறார். 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தல் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 244 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது. இந்நிலையில் இந்திய வங்கிகளிக் சுமார் ‌ 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்த போட்டியை ஓவல் மைதானத்தில் அமர்ந்து உல்லாசமாக கண்டுகளித்து வருகிறார். வங்கிக்கடன் மோசடி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், விஜய் மல்லையா சுதந்திரமாக நடமாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.