திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலி!

 

திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலி!

நெல்லை

திசையன்விளை அருகே சாலையில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த சிறுமி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரழந்தார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரம் பகுதியை சேர்ந்தவர் வின்செண்ட். கூலி தொழிலாளி. இவரது மகள் ஹெப்சிபா (9). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலி!

அப்போது, அந்த பகுதியில் சென்ற மின்சார ஒயர் அறுந்து சாலையில் கிடந்துள்ளது. இதனை கவனிக்காத சிறுமி, எதிர்பாராத விதமாக மின்கம்பியை மிதித்தார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வின்செண்ட் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.