கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் பலி!

 

கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் பலி!

கரூர்

கரூர் அருகே வீட்டில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த கோலக்குடி பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கசாமி. இவரது மகன் நிதிஷ்குமார்(9). இவர் கரூர் மாவட்டம் நந்தன்கோட்டையில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று நிதிஷ் வீட்டின் அருகே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் பலி!

அப்போது அவர் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதனால், உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தான். இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.