“நூடுல்ஸ் சாப்பிட்ட 9 பேர் மரணம்”: அதிர்ச்சி சம்பவம்!

 

“நூடுல்ஸ் சாப்பிட்ட 9 பேர் மரணம்”: அதிர்ச்சி சம்பவம்!

சீனாவில் நூடுல்ஸ் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடகிழக்கு மாகாணம் ஹீலோங்ஜியாங். இப்பகுதியில் வசித்து வரும் குடும்பத்தை சேர்ந்த 9 பேர், கடந்த 10ம் தேதி வீட்டிலேயே நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டுள்ளனர். உடனே எல்லாருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவர்கள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“நூடுல்ஸ் சாப்பிட்ட 9 பேர் மரணம்”: அதிர்ச்சி சம்பவம்!

மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 9 பேரும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். அவர்கள் சாப்பிட்ட உணவை பரிசோதித்ததில், புளித்த சோள மாவு கலந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் ஒரு வருடத்துக்கு மேலாக ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்ததும் அதை அவர்கள் சாப்பிட்டதால் விஷமாகி 9 பேரும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.