மருத்துவமனையில் 9 மாத குழந்தை, தாய் மர்ம மரணம்; விஷம் வைத்து கொலையா?

 

மருத்துவமனையில் 9 மாத குழந்தை, தாய் மர்ம மரணம்; விஷம் வைத்து கொலையா?

மதுரை அருகே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத குழந்தையும் தாயும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை முனிச்சாலை பகுதியில் வசித்து வந்த தம்பதி பிரான்சிஸ் அருளானந்தம் – சண்முகப்பிரியா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை இருந்தது. திருமணம் ஆனதில் இருந்தே சண்முகப்பிரியாவிற்கும் அருளானந்தத்திற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. குடித்துவிட்டு வந்து சண்முகப்பிரியாவை அவர் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் 9 மாத குழந்தை, தாய் மர்ம மரணம்; விஷம் வைத்து கொலையா?

இந்த நிலையில் திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் சண்முகப்பிரியாவும் அவரது குழந்தையும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அடுத்த சில மணி நேரத்தில் சண்முகப்பிரியாவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குழந்தைக்கும் சண்முகபிரியாவுக்கும் உணவில் விஷம் வைத்து கொடுக்கப்பட்டதாக சண்முகபிரியாவின் பெற்றோர் போலீசில் கண்ணீர் மல்க புகாரளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது பிரேத பரிசோதனை அறிக்கையிலேயே உண்மை தெரிய வருமென போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.