விழுப்புரத்தில் உரிய ஆவணமில்லாத ரூ.9 லட்சம் பறிமுதல்!

 

விழுப்புரத்தில் உரிய ஆவணமில்லாத ரூ.9 லட்சம் பறிமுதல்!

விழுப்புரம்

விழுப்புரம் அருகே தெலங்கானாவை சேர்ந்த நபர் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துவந்த 9 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் விதமாக, பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர்.

விழுப்புரத்தில் உரிய ஆவணமில்லாத ரூ.9 லட்சம் பறிமுதல்!

அப்போது, காரில் 9 லட்சம் ரூபாய் பணம் எடுத்துச்செல்வது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் தெலங்கானாவை சேர்ந்தவர்கள் என்பதும், திண்டுக்கல்லுக்கு காரில் சென்றதும் தெரியவந்தது. மேலும், பணத்திற்கு அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுச்செல்ல அறிவுறுத்தினர். பின்னர் பறிமுதலான பணம் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.