இலங்கையில் இருந்து கடத்திவந்த 9 கிலோ தங்கம் பறிமுதல் – 5 பேர் கைது

 

இலங்கையில் இருந்து  கடத்திவந்த 9 கிலோ தங்கம் பறிமுதல் – 5 பேர் கைது

ராமநாதபுரம்

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு படகில் கடத்திவரப்பட்ட 9 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக 5 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இலங்கையில் படகு மூலம் தங்கம் கடத்திவருவதாக, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்று அதிகாலை மன்னார் வளைகுடா கடல் பகுதியில், இந்திய கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையில் இருந்து  கடத்திவந்த 9 கிலோ தங்கம் பறிமுதல் – 5 பேர் கைது

அப்போது கடலில் சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற நாட்டுப்படகில் இருந்தவர்களை பிடித்து சோதனைநடத்தினர். இந்த சோதனையில், மண்டபம் மரைக்காயர்பட்டிணம் பகுதியை சேர்ந்த அமீன் என்பவர் தங்கத்தை உடலில் மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து பல லட்சம் மதிப்பிலான 9 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், தங்க கடத்தல் தொடர்பாக அமீன் மற்றும் படகில் இருந்த மேலும் 4 பேரை கைதுசெய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர்.