சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்த 9 பேர் பலி!

 

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்த 9 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,091பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்த 9 பேர் பலி!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,586ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்த 9 பேர் பலி!

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் இன்று ஒரே நாளில் பலியாகியுள்ளார்கள். இதில் 3 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் என்றும் 6 பேர் கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர்களின் உடல் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவு வந்த பிறகே அவர்களின் இறப்புக்கு கொரோனா காரணமா? என்பது தெரியவரும்.